ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ எனுமா பாலிவுட் படத்தை ரீமேக் செய்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தினை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு முழுக்க காமெடி படமாக உருவாகி ரூ.220 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.தற்போது இந்த பாலிவுட் படத்தினை தமிழில் இயக்க உள்ளதாகவும்,அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பாலாஜி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவரது தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதனுடன் இந்த படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ என்று பெயரிட உள்ளதாகவும் , ஏற்கனவே இந்த டைட்டிலில் பாக்யராஜ் படமொன்று உள்ளதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிவிக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…