இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனி ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த படத்தை விடியும் முன் படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…