அதிகரிக்கும் கொரோனா தொற்று : மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்!

Published by
Rebekal

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மலேசியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய மலேசியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் அவர்கள், கொரோனா வைரஸால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று 660 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் பரவி வரக் கூடிய மாநிலங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்கு இரு வாரங்களுக்கு சில கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மூன்று மாநிலங்களிலும் வருகிற இரு வாரங்களுக்கு ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருள் வாங்க வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும், உயர் கல்வி, பள்ளிகள், பொழுதுபோக்கு, வழிபாட்டுத்தலங்கள் ஆகிய அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருக்கும். விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும், நேர கட்டுப்பாடுகளுடன் ஓட்டல், கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் எனவும், விமான நிலையம் துறைமுகம் செயல்படும். ஆனால் திருமண நிகழ்ச்சிகளுக்கு இந்த இரு வாரங்களில் சுத்தமாக அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… சவரனுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… சவரனுக்கு இன்று எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…

16 minutes ago

LIVE : நாளை ஈரோடு இடைத்தேர்தல் முதல்… பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு வரை.!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…

1 hour ago

ஜில்..ஜில்…: ‘வட தமிழ்நாட்டில் அடர்ந்த பனிமூட்டம்’ சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்.!

சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…

1 hour ago

6 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சு சாம்சன்? காரணம் என்ன?

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…

2 hours ago

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…

3 hours ago

நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…

3 hours ago