1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்த ரிச்சா கோட்டிடம், மன்னிப்பு கேட்ட நடிகை பாயல் கோஷ்.
பாலிவுட் நடிகை பாயல் கோஷ் அவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக பட வாய்ப்பு கேட்டு சென்ற பொழுது, இயக்குனர் அனுராக் காஷ்யா அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தன்னுடன் நடிகைகள் ரிச்சா ஹீமார்த் ரோசிஸ் போன்றவர்களும் இதுபோன்ற பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டவர்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கூறிய ரிச்சா பாலியல் குற்றச்சாட்டில் தேவையில்லாமல் தனது பெயரை குறிப்பிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும் இதனால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பாயல் கோஷ் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்டவர்களின் பதில் மனுவை தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்த பாயல், மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நிபந்தனையற்ற மன்னிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவதூறான கருத்துக்களை திரும்பப் பெறுவதாகவும், சமூக ஊடகங்களில் பதிவாகி இருக்கக்கூடிய தனது கருத்துக்களை நீக்குவதாகவும், மேற்கொண்டு எந்த ஒரு தவறான கருத்தையும் கூற மாட்டேன் எனவும் உயர் நீதிமன்றத்தில் பாயல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…