அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த ,நிலையில், லிண்டா விளையாட்டாக கணவனை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார்.
அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் கலந்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜான் தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு வெளியே மீன்பிடிக்க சென்ற போது, திடீரென லிண்டா தனது கணவரை ஆன்லைனில் விற்பனை ஏலத்திற்கு விட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஜான் எனது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. அவர் மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக உணவு வைத்து தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால் இவருக்கு இன்னும் சில பயிற்சிகள் தேவைப்படுகிறது. எனக்கு அதற்கான பொறுமையும் நேரமும் இல்லை. இந்த விற்பனை இறுதியானது என பதிவிட்டு அதில் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்று பதிவிட்டிருந்தார்.
விளையாட்டாக இவர் செய்த காரியத்தை உண்மை என நம்பி 12 பெண்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து அவரது நண்பர்கள் ஜானுக்கு தெரிவிக்கும் வரை, ஜானுக்கு இதுகுறித்து தெரியவில்லையாம். இந்நிலையில், வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை குறுகிய நேரத்தில் நீக்கியது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…