அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தற்காலிகமாக வேலைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் போது வழங்கப்படக்கூடிய விசா தான் எச்-1 பி. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணி புரியக்கூடிய பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா எச்-1 பி மற்றும் எச்-4 ஆகிய விசாக்களை வழங்கி வருகிறது.
இந்த விசாவின் மூலமாக இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் எச்-1 பி விசா வழங்குவதில் புதிதாக பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார். இதனை அடுத்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக எச்-1 பி விசா வழங்குவதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இடைக்கால தடை விதித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் எச்-1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி தற்போது நேற்று அமெரிக்க குடியேற்ற துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த எச்-1 பி விசா தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…