பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தோற்று உள்ளதா? சோதனைக்கு ஒப்புக்கொண்டதாக உதவியாளர் தகவல்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அங்கு இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அண்மையில் பாகிஸ்தானின் பிரதமராகிய இம்ரான்கானை பிரபல அறக்கட்டளை தலைவர் பைசல் எடி என்பவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு நடந்த சில தினங்களுக்கு பிறகு பைசலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவருடன் ஆலோசனை செய்த பிரதமர் இம்ரான்கான்க்கும் இந்த தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் வலுத்ததால், அவர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தனிமையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையை இம்ரான்கான் மேற்கொள்ள ஒப்புக் கொண்டதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார். அதாவது பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிப்பதற்காக இந்த பரிசோதனை செய்வார் என அவரது உதவியாளர் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…