இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.

கொழும்பில் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளது.