ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து முடித்துள்ள டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார்.
ஆர்யாவின் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மனைவியான சாயிஷா நடித்துள்ளார். இந்த படத்தை மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள முதல் படமாகும். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டெடி பொம்மையும் இவர்களுடன் இணைந்து நடிக்கும்படி படம் உருவாகியுள்ளது.
ஆர்யா மற்றும் சாயிஷாவின் முதலாமாண்டு திருமண விழாவில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்து இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், டெடி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும், இந்த படத்தின் வெளியீட்டிற்கான உரிமைகள் திரையரங்குகளுக்கு முன்பே விற்கப்பட்டதாகவும், டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…