ட்வீட்டரில் ரசிகர் ஒருவர் இசைப்புயலிடம் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் தயாரித்து இசையமைக்கும் திரைப்படம் 99சாங்ஸ். இது இசையை மையமாக கொண்ட காதல் படமாகும். இதனை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதில் இஹான் பட், எடில்ஸி வர்காஸ், லிசா ரே, மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பரோட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மொத்தமாக 14பாடல்கள் உள்ளது. தமிழில் ஒரு சில பாடல்களை கார்க்கி மற்றும் தாமரை எழுதியதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திலிருந்து தேரி நாசார் என்ற பாடலின் இந்தி வெர்ஷன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர் களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை விரைவில் வெளியிட சொல்லி ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தேரி நாசார் பாடல் தமிழில் வர காத்திருக்கின்றேன் என்றும், இந்த பாடல் என்றால் எனக்கு பைத்தியம் என்றும் ஒருநாள் 50 முறைக்கு மேலாவது இந்த பாடலை கேட்பேன் என்றும், தமிழில் இந்த பாடலை கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ. ஆர். ரஹ்மான், தேரி நாசார் பாடலின் தமிழ் வெர்ஷனை பாடலாசிரியர் கபிலன் மிகவும் நன்றாக எழுதியுள்ளார் எனவும், இந்தி வெர்ஷனை விட தமிழ் வெர்ஷன் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். எனவே இந்த பாடலின் தமிழ் வெர்ஷன் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரசிகர்களை காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…