இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது – திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே

Default Image

இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது.

இந்தியா திபெத் சீனா உலகளாவிய அமைதியை ஒருங்கிணைக்கிறது” என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்  திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்தால் சீனா தனியாக இருக்கும் என்றும் உலகத் தலைமையால் இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும், எந்தவொரு போரும் தொடங்கினால் சீனா தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பஞ்சீல் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இரு நாடுகளுக்கும் இடையே ஒருபோதும் வன்முறை மோதல்கள் இருக்காது என்றும், எல்லை ஆக்கிரமிக்கப்படாது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் சீனா அனைத்து ஒப்பந்தங்களையும் உடைத்துவிட்டது. எனவே, சீனாவின் விரிவாக்கக் கொள்கைகளால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால் உலகளாவிய தலைமை இந்தியாவை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா தலாய் லாமாவை மோசமாக நடத்தியது. இதனால், 80 ஆயிரம் திபெத்தியர்கள் தப்பி ஓட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். எங்களுக்கு தங்குமிடம் கொடுத்து, எங்கள் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க உதவிய இந்தியர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிராந்தரமானது என்று சங்கே கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்