நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.!

Default Image

நான் எப்படி படமாக்க வேண்டியுள்ளது என்று புரியவில்லை, ஆனாலும் அந்த படத்தை எடுத்து முடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக உருவாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது மேலும் படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்களை காட்சிகளை படமாக்கவுள்ளது, ஊரடங்கு முடிந்தபின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கேள்வி எழுதப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது இயக்குனர் மணிரத்தினம் “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் கிடைக்காது தியேட்டரில் படம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது .

கொரனோ வைரஸ் அச்சுறுத்தம் திரையுலகம் மீண்டும் செயல்படத் தொடங்கியதும் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும், திரைப்படத்துறை தொடங்கும்போதே உறுதி செய்யும் விதமாக நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் மேலும் அரசு உதவியும் சினிமாத்துறைக்கு தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

அடுத்ததாக பேசிய இவர் நான் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கு ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது படத்துக்காக பிரமாண்ட போர்கள் காட்சிகள் மற்றும் அதிகமான கூட்டத்தினர் பங்கேற்கும் காட்சிகள் நான் எப்படி படமாக்க வேண்டியுள்ளது என்று புரியவில்லை, ஆனாலும் அந்த படத்தை எடுத்து முடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்