இந்தாண்டு நடைபெற்ற பண்டிகை கால விற்பனையில் ரியல்மி நிறுவனம், 6.3 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து, புதிய மைல்கல் படைத்தது.
தொடர்ச்சியாக குறைந்த பட்ஜேட்டில் டாப்பு டக்கரூ போன்களை வெளியிட்டு வரும் நிறுவனம், ரியல்மி. இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர். அதற்கு காரணம், குறைந்த விலையில் அதிக ஸ்பெக்ஸ்-ஐ கொடுப்பது. அதிலும் பண்டிகை கால விற்பனையில் குறைந்த விலையில் கிடைத்ததால், அந்நிறுவனம் புதிய மைக்கல் எட்டியது.
அந்தவகையில் இந்த பண்டிகை கால விற்பனையில் அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டிபோட்டு சலுகைகளை அறிவித்தனர். இதில் ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, பல சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் விற்பனையான ரியல்மி சாதனங்கள் குறித் தகவல்களை அந்நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
அதன்படி ரியல்மி நிறுவனம், 6.3 மில்லியன் (63 லட்ச) ரியல்மி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டைவிட 20% அதிகமாகும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரியல்மி ஸ்மார்ட் டிவி-கள், 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடியோ சாதனங்கள் இந்த பண்டிகை தின விற்பனையில் மட்டும் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் புதிய மைல்கல் ஆகும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…