ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம், இந்தியாவில் மே 2018ல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் சூடு பிடித்த ரியல்மி பிராண்டு, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் பிராண்டுகளுக்கு போட்டியாளராகவும் பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ரியல்மி ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும், விவோ மற்றும் ஒப்போ போன்று இல்லாமல் ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் கணிசமான வரவேற்பினை துவக்கம் முதலே பெற்று வருகிறது.
இந்தியாவில் துவங்கப்பட்ட ரியல்மி நிறுவனம், தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 20 நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரியல்மி பிராண்டு மொத்தம் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…