பெண் இனம் இருப்பது தெரியாமல் 41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்சான்..!

Published by
Sharmi

பெண் என்ற ஒரு இனம் இருப்பதே அறியாமல் 41 ஆண்டுகளாக காட்டிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் ஹோ வேன் லாங் என்ற ரியல் டார்சான்.

டார்சான் என்ற படத்தில் காட்டு மனிதன் ஒருவர் வாழ்நாளில் மிருகங்கள், மரம், செடி என இயற்கையோடு வாழ்ந்து வந்ததை பார்த்திருப்போம். ஆனால், உண்மையாகவே ஹோ வேன் லாங் ரியல் டார்சானாக வாழ்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஹோ வேன் லாங் வியட்நாமை சேர்ந்தவர். 1972  வியட்நாம் போரின் போது அமெரிக்கா நடத்திய குண்டுத்தாக்குதலில் லாங்கின் தாய் மற்றும் இரு சகோதரர்கள் இறந்துவிட்டனர். இதன் காரணத்தால் லாங்கின் தந்தை, இவரையும் இவரது சகோதரரையும் அழைத்து கொண்டு அங்கிருக்கும் குவாங் காய் மாகாணத்தின் டே ட்ரா என்ற காட்டுப்பகுதிக்குள் வாழ சென்றுள்ளார்.

பின்னர் நகரத்திற்கு திரும்பவே இல்லை. காட்டுக்குள் கிடைக்கும் பழங்கள், மலைத்தேன், காட்டு விலங்குகள் இவையே இவர்களின் உணவாக இருந்துள்ளது. கடந்த 40 வருடங்களில் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்துள்ளனர். அப்போதும் யார் கண்ணிலும் படாதவாறு ஒளிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் 2015 ஆம் ஆண்டில் ஹோ வேன் லாங்கின் குடும்பத்தை பார்த்துள்ளார். பின்னர் அவர்களை தேடி சென்று பேசி அந்த குடும்பத்தை கிராமத்திற்கு அழைத்து வந்து மக்களின் சாதாரண வாழ்க்கையை பழக்கப்படுத்தியுள்ளார்.

மேலும், ஹோ வேன் லாங்கிற்கு பெண் என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது. கடந்த 41 வருடங்களாக காட்டிலேயே வாழ்க்கை இருந்து விட்டதால் எதுவும் தெரியவில்லை. தற்போது இவருக்கு 46 வயதாகிறது. இருந்தாலும், மனதளவில் ஒரு குழந்தையை போன்றவர். இவருக்கு அந்த புகைப்படக்கலைஞர் அல்வரோ செரிசோ மக்களின் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்துள்ளார். இது குறித்து ஹோ வேன் லாங், காட்டு வாழ்க்கை மிக அமைதியாக இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த உலகம் சத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கு மனிதர்களோடு விலங்குகள் பழகுவதை ஆச்சர்யமாக உள்ளது என்றும், காட்டில் விலங்குகள் இவரை கண்டு அஞ்சி ஓடும் என்றும் கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

15 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

15 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

15 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

15 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

16 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

16 hours ago