பெண் இனம் இருப்பது தெரியாமல் 41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்சான்..!

Published by
Sharmi

பெண் என்ற ஒரு இனம் இருப்பதே அறியாமல் 41 ஆண்டுகளாக காட்டிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் ஹோ வேன் லாங் என்ற ரியல் டார்சான்.

டார்சான் என்ற படத்தில் காட்டு மனிதன் ஒருவர் வாழ்நாளில் மிருகங்கள், மரம், செடி என இயற்கையோடு வாழ்ந்து வந்ததை பார்த்திருப்போம். ஆனால், உண்மையாகவே ஹோ வேன் லாங் ரியல் டார்சானாக வாழ்ந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஹோ வேன் லாங் வியட்நாமை சேர்ந்தவர். 1972  வியட்நாம் போரின் போது அமெரிக்கா நடத்திய குண்டுத்தாக்குதலில் லாங்கின் தாய் மற்றும் இரு சகோதரர்கள் இறந்துவிட்டனர். இதன் காரணத்தால் லாங்கின் தந்தை, இவரையும் இவரது சகோதரரையும் அழைத்து கொண்டு அங்கிருக்கும் குவாங் காய் மாகாணத்தின் டே ட்ரா என்ற காட்டுப்பகுதிக்குள் வாழ சென்றுள்ளார்.

பின்னர் நகரத்திற்கு திரும்பவே இல்லை. காட்டுக்குள் கிடைக்கும் பழங்கள், மலைத்தேன், காட்டு விலங்குகள் இவையே இவர்களின் உணவாக இருந்துள்ளது. கடந்த 40 வருடங்களில் 5 முறை மட்டுமே மனிதர்களை பார்த்துள்ளனர். அப்போதும் யார் கண்ணிலும் படாதவாறு ஒளிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் 2015 ஆம் ஆண்டில் ஹோ வேன் லாங்கின் குடும்பத்தை பார்த்துள்ளார். பின்னர் அவர்களை தேடி சென்று பேசி அந்த குடும்பத்தை கிராமத்திற்கு அழைத்து வந்து மக்களின் சாதாரண வாழ்க்கையை பழக்கப்படுத்தியுள்ளார்.

மேலும், ஹோ வேன் லாங்கிற்கு பெண் என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது. கடந்த 41 வருடங்களாக காட்டிலேயே வாழ்க்கை இருந்து விட்டதால் எதுவும் தெரியவில்லை. தற்போது இவருக்கு 46 வயதாகிறது. இருந்தாலும், மனதளவில் ஒரு குழந்தையை போன்றவர். இவருக்கு அந்த புகைப்படக்கலைஞர் அல்வரோ செரிசோ மக்களின் வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்துள்ளார். இது குறித்து ஹோ வேன் லாங், காட்டு வாழ்க்கை மிக அமைதியாக இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த உலகம் சத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கு மனிதர்களோடு விலங்குகள் பழகுவதை ஆச்சர்யமாக உள்ளது என்றும், காட்டில் விலங்குகள் இவரை கண்டு அஞ்சி ஓடும் என்றும் கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

32 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

51 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago