ஏழை குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளித்து ரியல் ஹீரோவான சோனு சூட்.!

Published by
Ragi

ஏழை விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் கொடுத்து உதவியதோடு, படிப்பு செலவுகளையும் சோனு சூட் ஏற்று ரியல் ஹீரோவாக உள்ளார்.

நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார். இந்த நிலையில் தற்போது ஒரு ஏழை விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது விவசாயம் செய்ய முடிவு செய்த அவருக்கு காளை வாங்க பணமில்லாமல் அவதிப்பட, வேறு வழியின்றி தனது இரண்டு மகள்களின் உதவியுடன் ஏர் உழுதுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அதனை கண்ட சோனு சூட் அந்த விவசாயின் தகவலை பகிர்ந்தால் அவருக்கு இரண்டு காளை மாடுகள் வாங்கி தருவதாக கூறியிருந்தார். அதனையடுத்து நெட்டிசன்கள் விவசாயியை குறித்த தகவல்களை கண்டுபிடித்து சோனு சூட்டுக்கு பகிர்ந்துள்ளனர்.

இரண்டு காளை மாடுகள் வாங்கி தருவதாக சோனு சூட், நேற்றிரவு விவசாயின் வீட்டின் முன்பு புத்தம் புதிய டிராக்டர் வந்து நின்றது. இதனை பார்த்த அந்த ஏழை குடும்பம் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சோனு சூட் அந்த அவரது இரண்டு மகள்களின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார். பெரும் உதவியை செய்த சோனு சூட்டிற்கு விவசாயி குடும்பம் நன்றியை தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சோனு சூட்டின் இந்த உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago