வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என செய்தியாளரின் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகிறது.மேலும் கொரோனா பரவலை தடுக்க, பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து வருகிறது.
அந்தவகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர், “கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க சீனாவுடன் இணைய தயாரா” என கேள்வி எழுப்பினார். அதற்கு டிரம்ப், வெற்றிகரமாக கொரோனா தடுப்பு மருந்தை தயார் செய்ய சீனா உட்பட எந்த நாடாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை வளர்ச்சியில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுகிறது எனவும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு அமெரிக்கா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் அமெரிக்க ராணுவம் அதனை விநியோகம் செய்யும் என அந்த பேட்டியில் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு நோய்க்கு எதிராக, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை முடிவில் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரிவித்துள்ளனர்.
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…