அதிபர் பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி, பொதுமக்கள் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரதமர் பதவி விலக மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது.

இதன்பின் போராட்ட களத்தில் வன்முறைகள் வெடித்தன. இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன்பின்னரும் கொழும்புவில் போராட்டம், கலவரமாக மாறியது. போராட்ட களத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியாக தகவல் வெளியாகியிருந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் தலைவர்கள் வீடுகளில் தீ வைக்கப்பட்டதாகவும், காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியாகவும் பரபரப்பாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள், முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவ தொடங்கிய நிலையில், ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால் இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்றும் இலங்கைக்கு மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

10 minutes ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

1 hour ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

2 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

2 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

3 hours ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

3 hours ago