நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 169-வது படத்தினை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .இதனால் கடந்த டிசம்பர் பாதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த கூட்டணியில் ஏற்கனவே பேட்ட திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.தற்போது ‘தலைவர் 169’ படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்திக் சுப்பராஜ் தற்போது விக்ரம்-துருவ் விக்ரமை வைத்து படத்தினை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…