வெப்சீரிஸி மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார் பிரியாமணி இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பிரியாமணி. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் வீர தமிழச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அதனையடுத்து 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
அதனையடுத்து அண்மையில் தான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். ஆம் இந்தியில் மைதான் என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி, ஏற்கனவே தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதீத் என்ற உணர்வுமிக்க வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.
இறந்து போனதாக கூறப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவர் 10 வருடங்கள் கழித்து மீண்டும் மனைவி, மகளுடன் இணைந்து புதிய வாழ்க்கை வாழ வருகிறார். இவர் இறந்ததாக கூறப்பட்டதற்கு காரணம் என்ன, அப்போது அவரது குடும்பத்தின் நிலை என்ன இது தான் கதை. இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…