இன்றைய (23.03.2020)நாள்!எப்படி இருக்கு!?? ராசிபலன் இதோ!

Default Image

பஞ்சாங்கம்

இன்று (23.03.2020)திங்கள் கிழமை விகாரி வருடம், பங்குனி 10-ம் தேதி நல்ல நேரம் காலை 6.30 – 7.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 7.30 -9.00 எம கண்டம் 10.30 – 12.00 குளிகை 1.30 – 3.00 திதி சதுர்த்தி நட்சத்திரம் பூரட்டாதி  சந்திராஷ்டமம் மகம்,ஆயில்யம் யோகம்: சித்த / மரண யோகம் சூலம்: கிழக்கு  பரிகாரம்: தயிர் விசேஷம்: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் பவனி.

 

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: இன்று எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் செல்வ சேர்க்கை ஏற்படும். எதிலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள்.பயணத்தின் போது கவனம் தேவை.
.    
ரிஷபம்: தொழிலில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.  பண உதவி கிடைக்கும்.போட்டிகள் குறையும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நிலவி வந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.
 
மிதுனம்:  பிரச்சனைகள் தீரும். தேங்கி கிடந்த பணிகளை  விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும்,மனதில் அமைதி ஏற்படும்.
 
கடகம் சலிப்பு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். 
 
சிம்மம்: இன்று மனம் மகிழும் சம்பவம் நடக்கும். எடுக்கும் முயற்சிக்கு  வெற்றி கிடைக்கும். பணவரவு கூடும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை தக்க பலன் அளிக்கும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 
கன்னி:  எதிர்ப்புகள் விலகி வெற்றி கிடைக்கும் நாள். காரிய அனுகூலம் உண்டாகும். அனுபவ அறிவினால் திறம்பட செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள்.மனகவலை தோன்றிய வண்ணம் இருக்கும்.விடுபட ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். 
 

துலாம்:  இன்று மிக துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாக்குவாதங்களை தவிர்த்து காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். 

விருச்சிகம்: உதவி என்று கேட்பவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். தொழிலில் கவனத்தோடு செயல்படுவீர்கள்.எடுக்கும் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.

தனுசு:  ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து இன்று முடிவெடுப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. 

மகரம்: மனதில் நிம்மதி இன்று  உண்டாகும் . பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். 

கும்பம்:  மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி தைரியம் உண்டாகும்.தெளிவு பிறக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும். பிரச்சனைகள் அகலும்.பெற்றோர் மீது பாசம் அதிகரிக்கும். 

மீனம்: திறமையாக பேசி காரியங்களை சாதித்து  காட்டும் நாள்.பயணங்களால் பலன் கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet