நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர் மூலம் மிரட்டல்

Default Image

 நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு  படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது .ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதனிடையே   முத்தையா முரளி தரன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில், வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். முத்தையா முரளி தரன் அறிக்கையை மேற்கோள்காட்டி நடிகர் விஜய் சேதுபதி ,தனது ட்விட்டர் பக்கத்தில் ,நன்றி ..வணக்கம் என பதிவிட்டார்.

பின்பு 800 திரைப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில் ,நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்,இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார்.இந்நிலையில்  நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே சமூக வலைத்தளம் மூலமாக தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தநபர் அண்மையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்