என்னோட ஒரே பெரிய சொத்தை எரிச்சிட்டாங்க.. வேதனைப்பட்ட ரணில் விக்ரமசிங்கே.!

Default Image

எனது ஒரே ஒரு சொத்து அந்த வீடு தான். அங்குள்ள சுமார் 2500 புத்தகங்கள் தீயில் கொளுத்தப்பட்டது – வருத்தப்பட்டு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

முக்கிய பதவியில் இருந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்த வண்ணம் இருக்கின்றனர். பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்கள் தற்போது மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருக்கின்றனர்.

அதனால், போராட்டக்காரர்கள், அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக பிரதமராக இருந்து ராஜினமா செய்த ரணில் விக்ரமசிங்கே சொந்த வீட்டை போராட்டக்காரர்கள் எரித்துவிட்டனர். ‘

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, ‘ எனது ஒரே ஒரு சொத்து அந்த வீடு தான். அங்குள்ள சுமார் 2500 புத்தகங்கள் தீயில் கொளுத்தப்பட்டது. அங்கு விலையுயர்ந்த ஓவியங்கள் இருந்தது. அதுவும் தீயில் அளிக்கப்பட்டுவிட்டது.’ என வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்