மும்பையில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர், கரன் ஜோகர் உள்ளிட்ட சில பிரபலங்களும் வந்துள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஆலியாபட், இந்த திருமணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இன்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட, வீட்டில்… எங்களுக்கு பிடித்த இடத்தில் – எங்கள் உறவின் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் கழித்த பால்கனியில் – நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
மேலும் இன்னும் பல நினைவுகளை உருவாக்க எங்களால் காத்திருக்க முடியாது…காதல், சிரிப்பு, மௌனம், திரைப்பட இரவுகள், வேடிக்கையான சண்டைகள், மது மகிழ்வுகள் என நினைவுகள் நிறைந்துள்ளது.
எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் அனைத்து அன்புக்கும் ஒளிமிக்க வாழ்த்துக்கும் நன்றி. இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது.
அன்புடன்
ரன்பீர் மற்றும் ஆலியா ✨♥️”
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…