ட்விட்டரில் போலி கணக்குகளால் கதறும் ரம்யா பாண்டியன்..!

Default Image

கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த  நடிகைகளில் ஒருவர், ரம்யா பாண்டியன். இவர் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான, “ஜோக்கர்” என்ற படம் மூலம் அறிமுகமாகினார். இதன்பின் நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண் தேவதை” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியனின் பெயரில் ட்விட்டரில் அதிக போலிக் கணக்குகள்  உள்ளது. மேலும், அவர் பெயரில் உள்ள போலிக் கணக்கில் மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், அந்த அக்கவுண்டை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.

இதனை பற்றி பற்றி அவரிடம் கேட்டபோது, அது நான் இல்லை எனவும், எனது பெயரில் யாரோ போலி கணக்கை வைத்து ஆபாசமான புகைப்படத்தை வெளிடுகிறார்கள். இந்த புகைப்படத்தில் இருப்பதும் நான் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து ரம்யா பெயரில் உள்ள கணக்குகளுக்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பு இல்லை என்றும் தன் பெயரை பயன்படுத்தி தவறான புகைப்படங்களை வெளியிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்