என்னை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள்! சர்ச்சை இயக்குனர் பேச்சால் பரபரப்பு!

Default Image
  • இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இறந்துவிட்டார். 
  • இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா . ‘தான் இறந்துவிட்டால் என்னை ஸ்ரீதேவி கல்லறைக்கு அருகில் புதைத்துவிடுங்கள்.’ என கூறியுள்ளார். 

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மதம் துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஸ்ரீதேவியின் மறைவு குறித்து தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, கூறுகையில், ஸ்ரீதேவி மறைந்த செய்தியை யாரேனும் பொய் என கூறிவிடுங்கள். மேலும் கடவுள் என்னை மட்டும் விட்டுவிட்டு ஸ்ரீதேவியை ஏன் எடுத்துக்கொண்டார் என பதிவிட்டிருந்தார்.

இவர் அண்மையில் ரசிகர்களுடன்  உரையாடி கொண்டிருக்கும் போது , நான் இறந்த பிறகு என் உடலை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள். நான் இறப்பதற்கு கடைசி நிமிடங்கள் ஸ்ரீதேவியின் கல்லறையில் இருக்க விரும்புகின்றேன். என கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்