ஈரானுக்கு புறப்பட்டார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Default Image

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .இதன் பின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனையடுத்து   சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில்,இந்தியா-சீனா உறவுகள் குறித்து இரு அமைச்சர்களும் வெளிப்படையாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதியின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்டது குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீன துருப்புக்களின் நடவடிக்கைகள், ஏராளமான துருப்புக்களை குவித்தல், ஆக்கிரோஷமான நடத்தை மற்றும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகியவை இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பின்னர் தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்,கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ,உஸ்பெஸ்கிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு புறப்பட்டார்.அங்கு ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi
DC wins - KL Rahul celebration