தகிக்கும் கால்வான்:ரஷ்யா செல்லும் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

Published by
kavitha

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  இன்று ரஷ்யா செல்கிறார்.அங்கு ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதுடன்,ராணுவ ஆயுதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா-இந்தியா இடையே தகித்து வருகிறது எல்லைப் பிரச்சணை இன்னும் இரு மாதக்காலத்திற்குள் லாடக்கில் இருந்து இந்தியாவை துடைத்து எரிவோம் என்று அந்நாட்டு அதிபர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவிக்கிறார்.சீன ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வருகிறது.

இந்தியா எல்லையில் இம்மி அளவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வீரர்களை குவித்தும் முப்படையும் தொடர்ந்து கண்காணிப்பிலும் ,சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்தப்படி இருந்து வருகிறது.11 மணி நேரமாக விடிய விடிய பேச்சு வார்த்தை நடைபெற்றது.இவ்வாறு சீன-இந்தியா இடையே விரிசல் விபரீதமாகி கொண்டிருக்கும் வேளையில் சீனாவை கண்டிக்கும் வகையில்  ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான தகவல்: இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா செல்ல இருக்கிறார். இந்திய -சீனா இடையே மோதல் நிலவி வருகின்ற நிலையில் ராஜ்நாத்சிங்கின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்தியா ரஷ்யா இடையே கடந்த இரண்டு வருடங்களில் நிறைய ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை இந்தியா வாங்க உள்ளது.

அதே போல நேற்று ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் அதிகாரிகள் உடன் திடீரென ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவிற்கு ரஷ்யா இந்த ஆயுதங்களை , விமானங்களை விரைவாக வழங்க வேண்டும். fastrack அடிப்படையில் இந்தியாவிற்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை அவர் வைத்ததாக கூறப்படுகிறது. இந்தியா – சீனாவின் மோதல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த  நிலையில் தான் ரஷ்யா இரண்டாம் உலகப்போரில் நாசிக் ஜெர்மனியை வீழ்த்தியது.  இந்த போர் நடந்து சுமார் 75 வருடங்கள் முடிந்த நிலையில் இதில் 20 மில்லியன் ரஷ்ய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களை நினைவு கூறும் விதமான அங்கு இன்று ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.இந்த அணி வகுப்பில் கலந்து கொள்ள இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. இதன் பெயரிலே அங்கு நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.இதில் சீனாவும் கலந்து கொள்கிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.

ரஷ்ய பயணம் குறித்து ராஜ்நாத் சிங்  கூறுகையில்  இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் “சிறப்பு மற்றும் சலுகை பெற்ற செயல் திட்ட கூட்டாண்மை” ஒன்றாகும், மேலும் இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் இராணுவ ஒப்பந்தங்கள் பராமரிக்கப்படும், மேலும் பல வழக்குகளில் குறுகிய காலத்தில் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர்  75 வது ஆண்டுவிழா ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் மூன்று நாள் பயணமான தனது மாஸ்கோ பயணம் ஒரு உத்தியோகபூர்வ தூதுக்குழுவின் இந்தியாவிலிருந்து முதல் வெளிநாட்டு விஜயம் என்று கூறிய அவர்  “இது எங்கள் சிறப்பு நட்பின் அறிகுறியாகும். தொற்றுநோயின் அனைத்து சிரமங்களும் இருந்தபோதிலும், எங்கள் இருதரப்பு உறவுகள் பல்வேறு மட்டங்களில் நல்ல தொடர்புகளை வைத்திருக்கின்றன” என்று ராஜ்நாத் சிங் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது கூறினார்.மேலும்  “இந்தியா-ரஷ்யா உறவுகள் சிறப்பு மற்றும் சலுகை பெற்ற செயல்திட்ட கூட்டாண்மை ஒன்றாகும். எங்கள் பாதுகாப்பு உறவு அதன் முக்கியமான தூண்களில் ஒன்றாகும்” என  கூறினார்.

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

55 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

1 hour ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

2 hours ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

3 hours ago