வரலாற்றில் இன்று(31.12.2019).ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்..!

Published by
murugan

திரு.ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதில் தமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல் உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களான சிலரில் இவரும் ஒருவர் அவரது தாயார் திருமதி. இந்திராகாந்தி அவரது 48 வயதில், 1966 ஆம் ஆண்டு முதல்முறை பிரதமராக பொறுப்பெற்றார்.

ராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது தாத்தா பிரதமரானார். அவரது பெற்றோர்கள் லக்னோவில் இருந்து புதுதில்லிக்கு இடம் பெயர்ந்தனர். அவரது தந்தை பெரோஸ் காந்தி நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ராஜீவ்காந்தி தனது குழந்தை பருவத்தில் தனது தாத்தாவுடன் தீன் மூர்த்தி இல்லத்தில் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், விரைவில் அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு மிகவும் பிடித்தது விமானம் ஓட்டுவது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவுடனே தில்லி விமான ஓட்டுதல் கழகத்தின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்றார்.கேம்பிரிட்ஜ்ஜில் இருந்தபோது ஆங்கிலத்துறையில் படித்துக் கொண்டிருந்த இத்தாலி பெண் சோனியா மைனோவை சந்தித்தார்.

பின்னர் இருவர்கள் 1968-ல் புதுதில்லியில் திருமணம் செய்து கொண்டு  தங்களது இரு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் புதுதில்லியில் உள்ள திருமதி இந்திராகாந்தியின் இல்லத்தில் இருந்தனர்.

இதையடுத்து 1980-ல் விமான விபத்தில் உயிரிழந்த அவரது சகோதரர் சஞ்சயின் மரணம் பின்னர் அரசியலில் ராஜீவ்காந்தி இறங்கி அவரது தாயாருக்கு உதவவேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.இந்நிலையில் 1984 அக்டோபர் 31 அன்று அவரது தாயார்  சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி 1984 டிசம்பர் 31-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

Published by
murugan

Recent Posts

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

26 minutes ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

1 hour ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

2 hours ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

3 hours ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

4 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

4 hours ago