கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 18,552 ஆகவும்,384 பேர் பலியாகியுள்ளதாகவும்,10,244 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 15,685 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2,95,881 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறித்தும்,பிரதமர் மோடி குறித்தும் கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்டுள்ளதாவது:கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார் பேரழிவை எதிர்த்து போராட மோடி மறுக்கிறார். நாட்டின் புதிய பகுதிகளிலும் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை என்று விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…