ராசி கேது பெயர்ச்சி(21.03.2022)எந்த ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும்.!யாருக்கு அதிக நன்மை..!இன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்..!

Published by
Sharmi

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) இன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கொடுப்பார்கள்.

யாருக்கெல்லாம் வாழ்க்கையில் என்ன மாற்றம் வரப்போகிறது, எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், அதிக நன்மை கிடைக்கும், எந்த ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.  மேலும், இன்று உச்சரிக்க வேண்டிய முக்கிய மந்திரம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு கேது பெயர்ச்சியில் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: ராகு கேது பெயர்ச்சியில் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் மேஷம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மகரம், மீனம். இவர்கள் அருகில் உள்ள நவக்கிரகம் ஆலயத்திற்கு சென்று பரிகார பூஜைகளில் கலந்து கொண்டு உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

ராகு கேது பெயர்ச்சியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்: ராகு கேது பெயர்ச்சியில் கடகம், மகரம், மேஷம், மீனம், சிம்மம் இந்த ராசிக்காரர்கள் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ரீதியாக ஆரோக்கிய பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிறு பாதிப்பு தானே என்று அலட்சியம் செய்யாதீர்கள்.

ராகு கேது பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்: ரிஷபம், விருச்சிகம், கும்பம். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் இனி நடப்பவை எல்லாம் நன்மைக்கே. இதுவரை இருந்து வந்த அனைத்து பாதிப்புகளும் விலகி பல்வேறு அதிர்ஷ்டங்ள், நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு நன்மை கிட்டும். இதனை வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து அமர்ந்து 11 முறை உச்சரிக்க வேண்டும். இதனை தினமும் கூட உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக கிரக தோஷத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

கருட மந்திரம்:

ஓம் ஸ்ரீ காருண்யாய

கருடாய வேத ரூபாய

வினதா புத்ராய

விஷ்ணு பக்தி பிரியாய

அமிர்த கலச ஹஸ்தாய

பஹு பராக்ரமாய

பக்ஷி ராஜாய சர்வ வக்கிர

சர்வ தோஷ, விஷ சர்ப்ப

விநாசனாய ஸ்வாஹா

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து அனைவரும் நன்மை பெறுங்கள்.

Recent Posts

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா! 

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின.  இந்தப் போட்டி…

3 hours ago

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …

5 hours ago

“கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..,” லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …

6 hours ago

“நல்ல கருத்து சொல்ற படம்” மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!

சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…

7 hours ago

SAvAFG : நிலைத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா! ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 316 டார்கெட்!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டி…

7 hours ago

ஆதாரமற்ற குற்றச்சாட்டால் சொத்துக்கள் முடக்கம்: ‘மேல்முறையீடு செய்வேன்’ – ஷங்கர் முழக்கம்.!

சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…

7 hours ago