ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி..!

Published by
Ragi

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி.

உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் கொரோனா. தற்போது மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் நடிகரான ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு பணியாளர்களுக்க்காக ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார். மேலும் சென்னையில் உள்ள செங்கல்பேட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். மேலும் தென்னிந்தியா நடிகர் சங்கத்திற்கு மீண்டும் ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். ராகவா லாரன்ஸ் சென்னையில் உள்ள ராயபுரம் மக்களுக்கு ஏற்கனவே ரூ. 75லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.  மாற்றுத் திறனாளிகளான 50பேருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.  அடுத்ததாக ரூ. 50 லட்சத்தை அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார்.

ஆனால் தற்போதும் அவருக்கு அழைப்புகள், வீடியோக்கள் வருவதாகவும், அவர்களுக்கு தேவை பணம் இல்லை சாப்பிடுவதற்கு தேவையான அரசி தான். சாப்பாடு இல்லாமல் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பலர் கஷ்டப்படுவதாக தெரிவித்தார். இதை என் குடும்பத்திடமும், நண்பர்களிடமும் பகிர்ந்த போது எனது சகோதரர் எல்வின் ஐடியா ஒன்றை கூறினார். ஒருவரால் மட்டும் உதவி செய்ய முடியாது, எனவே உதவி செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரிடமும் கூறி நிதி திரட்டுவோம் என்று கூறினார். அதன்படி முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இதை கூறியதும் அவர் இந்த முயற்சிக்காக பாராட்டுகளை தெரிவித்தோடு, 100பை அரசி மூட்டைகளையும் கொடுத்து உதவியுள்ளார். அதனையடுத்து தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க கோரி கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா மற்றும் பல நடிகர்களின் ரசிகர்களிடமும், அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் கேட்டு கொண்டோம். நீங்கள் தரும் சிறிய தொகை கூட பல ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

5 hours ago