கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவடைய இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்பொழுது நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழிலாளிகள் சினிமாவில் வேலை செய்யும் பலர் முடக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சினிமா திரை உலகில் வேலை செய்த கோடிக்கணக்கான பெப்சி ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என பெப்சி நிறுவனம் அறிவித்து இருந்தது. அதை கருத்தில் கொண்டு பல நடிகர்கள் தங்களால் முடிந்த கோடிக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான பணத்தை கொடுத்து உதவினர்.
ராகவா லாரன்சும் இதற்காக 3 கோடி ரூபாய் வழங்கினார். அதில் 50 லட்சம் தமிழக முதல்வரின் நீதிக்கும், 50 லட்சம் பிரதமரின் நிதிக்கும், 50 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்கும், 50 லட்சம் இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் 75 லட்சம் நான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கும் என விளக்கத்துடன் வழங்கியிருந்தார்.
அவர்களுக்கு தேவையான உணவுகளையும் அவரும் காவல்துறை உதவியுடன் சிறப்பாக செய்ததாக கூறி இருந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் விநியோகஸ்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்த விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டி ராஜேந்திரன் அவர்களிடம் 15 லட்சம் ரூபாயை நன்கொடையாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…