இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்யும் ராகவா லாரன்ஸ்..!

Published by
Ragi

நடிகர் ராகவா லாரன்ஸ்  இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்து வருகிறார். 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இதில் தென்னிந்தியா சினிமாயுலகில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார்.மேலும் தாய் என்ற சமூக சேவை மூலம் இல்லாதவர்களுக்கு அரிசி முதலான பொருட்களையும் வழங்கி உதவி வருகிறார். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 200பை அரிசி மூட்டை களை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இளைஞர்களை பயன்படுத்தி தாய் முயற்சி மூலம் சமூக சேவை செய்வதை ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

ஹாய் நண்பர்களே, ரசிகர்களே, நான் ஒரு புதிய முயற்சியை தொடங்கினேன். பார்த்திபன் சார் அந்த முயற்சியான தாய் அமைப்பிற்கு 1000கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதிலிருந்து 500கிலோ அரிசியை பள்ளிகளில் படிக்கும் மற்றும் வேலை செய்பவர்களான சதாம், அருண், கோபி, வசந்தி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த உணவுப் பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு விநியோகிப்பார்கள். இந்த பணியை அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது, அவர்கள் ஒவ்வோருவரும் சிறந்த முறையில் சமூக சேவையை செய்பவர்கள் என்பதை கண்டேன், கேள்விப்பட்டேன். மேலும் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். மேலும்  அவர்களின் பிற செலவுகளுக்காள ரூ. 25000வீதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தவுள்ளேன். மேலும் அவர்கள் நினைத்திருந்தால் கேம்ஸ் விளையாடியும், சமூக ஊடகங்களை ஸ்கோரோலிங் செய்தும் நேரத்தை கழித்திருக்கலாம். ஆனால் அவர்கள் மற்றவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு சேவை செய்ய முடிவு செய்தனர். என்னை விட அவர்கள் பெரியவர்கள், பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். எனவே இந்த பொறுப்பையும் நான் அவர்களுக்கு அளிக்கிறேன், ஏனெனில் அவர்கள் தங்களால் முடிந்ததை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். சமூகத்திற்கு சேவை செய்ய முடிந்த வரை முயற்சிக்கும் ஒவ்வோரு இளைஞர்களையும்பாராட்ட வேண்டியது அவசியம் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார் . மேலும் இந்த இளைஞர்கள் அவர்களே சமைத்தும் உணவை வழங்கி உதவு வருகிறார்கள். தற்போது இதற்கு ராகவாவிற்கும், அந்த இளைஞர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

52 mins ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

13 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago