குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் பலர் இந்த ஊரடங்கால் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் வேலைக்கு சென்ற தமிழ் குடும்பம் ஒன்று தாங்கள் இரண்டு மாதங்களாக பசியால் வாடுவதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்க காசு இல்லை என்றும், வெளியே சென்றால் போலீஸ்காரர்கள் அடிப்பதாகவும், எனவே தமிழகத்திற்கு எங்களை கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கண்ணீருடன் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை சுட்டி காட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் இவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், என்னுடைய தரப்பிலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தமிழகத்திற்கு செல்ல விரும்பினால் குஜராத் அரசு அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு ராகவா லாரன்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜ்கோட் கலெக்டருக்கும், குஜராத் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்ததோடு, அந்த குடும்பம் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…