உலக நாடுகளுக்கு 120 கோடி கொரோனா தடுப்பூசி நன்கொடையாக வழங்க குவாட் நாடுகள் முடிவு செய்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள உச்சி மாநாடு அமெரிக்கா வாஷிங்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நான்கு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
அதில், இந்தோ-பசிபிக் மண்டல பகுதிகளுக்கு இதுவரை 7.9 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர உலகம் முழுவதும் மேலும் 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்க இருக்கிறோம் என உறுதி அளித்துள்ளது. மேலும் அடுத்ததாக வரவுள்ள பெருந்தொற்றை சிறந்த முறையில் கையாள்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…