பைட்டான்ஸின் புதிய ஒப்பந்தம்..டிக்டாக்கை கைப்பற்றும் மைக்ரோசாப்ட்..?

Published by
murugan

அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம் தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், டிக்டாக்கை அமெரிக்காவிலிருந்து தடைசெய்யயும்  ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்ததாக என்.பி.சி செய்தி வெளியிட்டது. இதற்கிடையில்,  அமெரிக்காவில் இருந்து  பைட்டான்ஸ் நிறுவனம் வெளியேறிய பின்னர், மைக்ரோசாப்ட் டிக்டாக்கைக் கைப்பற்றும் என கூறப்பட்டது.

அதற்கேற்றாற்போல டிக்டாக்கை அமெரிக்காவில் நிர்வகிக்கும் உரிமையை பெறுவதற்கு மைக்ரோசாஃப்ட் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. அமெரிக்காவில் இருந்து பைட்டான்ஸ் வெளியேறினால் அங்கு உள்ள சில பைட்டான்ஸ் முதலீட்டாளர்களுக்கு சிறு பங்குகளை கொடுக்கப்படும் என கூறப்பட்டது.

பைட்டான்ஸின் வெளிமுதலீட்டாளர்களில் சுமார் 70% அமெரிக்காவை சார்ந்தவர்கள். இந்நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பைட்டான்ஸின் புதிய திட்டத்தின் கீழ், அனைத்து அமெரிக்க பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பைட்டான்ஸின் புதிய ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா..?  என்பது தெரியவில்லை,மேலும் மைக்ரோசாப்ட் இதுகுறித்து கருத்து கூறவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 மில்லியன் அமெரிக்கர்களை கொண்ட டிக்டாக் இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 1,000 பேரை வேலையில் அமர்த்தி உள்ளது.மேலும் 10,000 பேரை அமெரிக்கா முழுவதும் வேலைகளில் அமர்த்துவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

12 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

1 hour ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago