அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 20ஆம் தேதி பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் பும் போட்டியிட்டனர். இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களையும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை இடங்களையும் பெற்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளர் குறைந்தது 270 தேர்தல் சபை உறுப்பினர்களை பெறுவது அவசியம். இந்நிலையில் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப், தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவரது அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பைடன் அதிபராக பதவியேற்பது சட்ட ரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…