ஆல் இங்கிலாந்து பேட்மின்ட்ன்: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!! முதல் சுற்றில் வெளியேற்றம்!!

Default Image
  • இங்கிலாந்தில் தற்போது மிகவும் பிரபலமான ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது
  • இந்திய அணி இந்த தொடரில் ஏதாவது ஒரு பட்டம் என்றல் 18 ஆண்டுகள் ஆவது குறிப்பிடத்தக்கது

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் சாய்னா நேவால் ,பிவி சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பிவி சிந்து இந்த தொடரில் ஏதாவது ஒரு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவின் சுங் ஜி ஹியுனை எதிர்கொண்டார். முதல் சுற்றில் 16-21 என இழந்த பிவி சிந்து அடுத்த சுற்றை 22-20 என வெற்றி பெற்றார். பின்னர் கடைசி ஆதிக்கம் செலுத்திய சுங் ஜி 18-21 என சிந்துவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்