புதுக்கோட்டையில் மணல் எடுக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

Default Image

பல  கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதாவது மணல் எடுக்க அனுமதி, வெளி நாட்டு மணல் மற்றும் எம் சாண்டை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் . கட்டிட பொறியாளர்கள், கட்டிட தொழிலார்கள், லாரி உரிமையாளர்கள், மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அனுமதியின்றி  புதிய பேருந்து நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்