பப்ஜி விளையாட்டு தென் கொரிய கம்பெனி மூலம் உருவாக்கப்பட்டதால் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை.
இந்திய-சீன எல்லை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபிறகு, சீன நிறுவனங்களின் மொபைல் ஆப்களான டிக் டாக், ஹலோ, யூசி பிரௌசர் போன்ற 59 மொபைல் ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கை பாதிக்கும்படியாக இந்த ஆப்கள் இருப்பதால் இதனை தடை செய்வதாக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது.
ஆனால், பப்ஜி மற்றும் கால் ஆஃ டியூடி ஆகிய மொபைல் ஆப்கள் மட்டும் ஏன் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை என பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தன.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது, பப்ஜி சீனாவை சேர்ந்தது அல்ல. பப்ஜி விளையாட்டானது, உருவாக்கப்பட்டது தென்கொரியாவில் உள்ள ப்ளுஹோல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் மூலமாக சீனாவில் பப்ஜி விளையாட்டு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகே, பப்ஜி விளையாட்டு சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.
அதேபோல டென்ஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிமி ஸ்டூடியோஸ் உடன் கூட்டு சேர்ந்து கால் ஆஃப் டியூட்டி மொபைல் ஆப் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமான கலிபோர்னியாவை சேர்ந்தது ஆகும். பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி ஆகிய இவ்விரண்டு ஆப்களும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…