கடந்த 2018ம் ஆண்டு 66வது தேசிய விருது வழங்கப்பட்ட பாரம் திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி என்ற பெண் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த படம் என்று தேசிய விருதில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம் திரைப்படம் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் புரோமோஷனுக்கு இயக்குனர் மிஸ்கின் இறங்கி வேலை செய்திருக்கிறார். அதாவது பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி பாரம் திரைப்படம் வெளியானதை அடுத்து அப்படத்தின் போஸ்டரை அண்மையில் இயக்குனர் மிஷ்கின் தெருவில் இறங்கி ஓட்டியுள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். அக்காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவராலும் விரும்பி பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால் துப்பறிவாளன் படத்திற்காக மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…