போராட்டக்காரர்கள் நீச்சல்குளத்தில் ஆனந்த குளியல்… இலங்கை ஜனாதிபதி தப்பி ஓட்டம்…

Default Image

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் உள்நுழைந்த போராட்டக்காரகர்கள், ஜனாதிபதி தப்பியோடியதை அடுத்து ஜனாதிபதி மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் ஆடியுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டக்காரர்கள் பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.

கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வந்தனர். எனினும்,போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்நுழைந்துள்ளது விட்டனர்.  இந்த பரபரப்பான சூழலில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் போராட்டக்கார்கள், ஜனாதிபதி மாளிகையில் இருந்த நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் ஆடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வெகு வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்