நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அண்ணாத்த” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ரஜினி தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏனெனில், நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் பிரியங்கா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவில்லை என தகவல் பரவி வருகிறது. படத்தில் பிரியங்கா நடிக்கிறாரா இல்லையா என்பதை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகுதான் தெரிய வரும் அதுவரை பொறுமையுடன் காத்திருக்கலாம்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…