கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக வெளியான களத்தில் சந்திப்போம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக குருதி ஆட்டம் , கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆம், அந்த படத்தை நயன்தாராவை வைத்து ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் கே.எம் இயக்கவுள்ளதாகவும், திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இதற்கான படப்பிடிப்பு ராமேஸ் வாரத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை கதாநாயகியை தவிர்த்து மற்ற கதாபாத்திரத்தில் நடிக்காத பிரியா பவானி சங்கர் முதன் முதலாக கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…