தனியுரிமை அச்சுறுத்தல்கள்:ஃபேஸ்புக்கில் முக்கிய அம்சத்தை நீக்க நிறுவனம் முடிவு!

Published by
Edison

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளது. எனினும் தனது சமூக ஊடக செயலியின் பெயரை ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.

இந்த நிலையில்,ஃபேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் முக அங்கீகார( face recognition) அம்சத்தை நீக்குவதற்கான திட்டங்களை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தனியுரிமைச் சிக்கல்கள் காரணமாக ஃபேஸ்புக்கில் இருந்து முக அங்கீகார அம்சத்தை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.நிறுவனத்துக்கு எதிர்மறையான பொதுக் கருத்து மற்றும் மெட்டாவேர்ஸில் கவனம் செலுத்துவதற்கான நிறுவனத்தின் திட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக,மெட்டாவின் துணைத் தலைவர் ஜெரோம் பெசென்டி கூறுகையில்: “இந்த மாற்றம் தொழில்நுட்ப வரலாற்றில் முக அங்கீகார பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்.

எனினும்,முகத்தை அடையாளம் காணும் அல்காரிதம்கள் உடனடியாக நிறுத்தப்படாது. இது அடுத்த சில வாரங்களில் நிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் டிஜிட்டல் புகைப்படங்களின் உலகில் மிகப்பெரிய அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது,அதன்படி,முக அங்கீகார அம்சத்தில் யார் யார் என்பதற்கான துல்லியமான தரவை ஃபேஸ்புக் வழங்குகின்றன.

இந்த அம்சம் முதன்முதலில் டிசம்பர் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஃபேஸ்புக்கில்  பதிவேற்றப்படும் புகைப்படங்களில் உள்ளவர்களுக்கு தானாகவே குறிச்சொற்களை(tag) பரிந்துரைக்கிறது. ஃபேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதியால் தங்களது தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும் கூறிவந்தனர்.இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் இருந்து கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

8 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

9 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

9 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

10 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

11 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

12 hours ago