மெய்க்காப்பாளருடன் இளவரசிக்கு தொடர்பு என்னும் உண்மையை மறைக்க மற்ற மெய்க்காப்பாளர்களுக்கு 12 கோடிக்கும் அதிகமாக இளவரசி பரிசுகள் மற்றும் பணம் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
துபாய் இளவரசி அவர்கள் ஹயா பினத் ஹுசைன் அப்போது ஆட்சியாளராக இருந்த சேக் முகமது அவர்களிடம் கூட தெரிவிக்காமல் தனது கணவரை 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது விவாகரத்து செய்தார். ஏனெனில் இவர் ஏற்கனவே மெய்க்காப்பாளர் ரஸ்ஸல் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது தொடர்பு அனைவருக்கும் தெரியவந்துள்ளது, அதனைத் தொடர்ந்து பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் படி 2016ஆம் ஆண்டு மெய்க்காப்பாளர் முழுமையாகக் ஹயாவுக்கு வேலை செய்யத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து 46 வயது ஹயா 37 வயது மெய்க்காப்பாளர் ரஸ்ஸல் என்பவருடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருந்தது அம்பலமாகி உள்ளது. அதன் பின் இந்த சர்ச்சைகள் தொடர்ந்து வந்ததால், மெய்க்காப்பாளர் திருமணம் செய்து கொள்வதே முடிவு என்ற நிலை வந்ததை அடுத்து அவர் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இது தொடர்பான விவகாரம் சற்று தளர்ந்தது நிலையில் இருந்தது. அதன் பின் ஹயாவின் மற்ற மெய்க்காப்பாளர்கள் இது குறித்து வெளியில் யாருக்கும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அனைவருக்கும் கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் மற்றும் பணம் கொடுத்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு கொடுத்த அன்பளிப்பில் 12 லட்சம் மதிப்புடைய கடிகாரம் 50 லட்சம் மதிப்பில் துப்பாக்கி என பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…