நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார்.
நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன நடக்கிறது? என் பின்னால் உள்ள பொருட்கள் நகர்கிறதா? இங்கு லேசான நிலநடுக்கத்தை நாம் உணர்கிறோம்” என கூறினார். அதற்க்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் “ஆம், ஆம், நிலநடுக்கத்தால் நாடாளுமன்ற வளாகமே குலுங்குகிறது. உங்களுக்கு ஏதும் ஆபத்து இல்லையே. நலமாகத்தான இருக்கிறீர்கள்” என கேட்டார் மேலும், “பேட்டியை தொடர விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு பிரதமர் ஜெசிந்தா, சிரித்தபடியே “பேட்டியை தொடரலாம்” என கூறினார். அந்த நிலநடுக்கத்துக்கு மத்தியிலும், அவர் அந்த நேரலையை முழுமையாக முடித்தார்.
இந்நிலையில், வெலிங்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 5.6 புள்ளிகளாக பதிவானது. மேலும் அந்த நிலநடுக்கத்தினால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 (இன்று) சென்னை திருவான்மியூரில் உள்ள…
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…