கொரோனா தாக்கம் குறையாமல் இருக்கும் போது ஊரடங்கை தளர்த்தினால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று கனடா பிரதமர் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கனடாவிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் மோசமான விளைவு ஏற்படும் என்று மாகாண ஆளுநர்களுக்கு கனடா பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கொரோனாவால் 67,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,693 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில், மாண்ட்ரீல் தீவு கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்கிறது. அங்கு மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் கியூபெக் மாகாணத்தை மீண்டும் வணிகத்திற்கு திறக்க அம்மாகாண ஆளுநர் முடிவு செய்திருப்பது நாட்டையே மோசமான நிலைக்கு தள்ளிவிடும் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…