விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி கனடா பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை!

Published by
Rebekal

கனடா பிரதமர் ஜஸ்டின் உடன் தொலைபேசியில் ஆலோசனை பேசிய பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், விவசாயிகளின் அமைதியான இந்த போராட்டத்திற்கு கனடா எப்பொழுதுமே ஆதரவளிக்கும் எனவும், விவசாயிகளின் போராட்டம் தனக்கு கவலை அளிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமரின் கருத்து குறித்து கனடா தூதர் நதிர் பட்டேலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் கனடா பிரதமரும், மந்திரிகளும் இந்தியாவிலுள்ள விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசப்பட்டதாகவும் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளை பற்றி பகிர்ந்து கொண்டதுடன், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்புகள் உலக நாடுகளுக்கு மிகுந்த உதவியாக இருப்பது குறித்து இருவரும் பேசியதாகவும் கனடா பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் இருந்ததாகவும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

10 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

14 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

15 hours ago