விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி கனடா பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை!

Published by
Rebekal

கனடா பிரதமர் ஜஸ்டின் உடன் தொலைபேசியில் ஆலோசனை பேசிய பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், விவசாயிகளின் அமைதியான இந்த போராட்டத்திற்கு கனடா எப்பொழுதுமே ஆதரவளிக்கும் எனவும், விவசாயிகளின் போராட்டம் தனக்கு கவலை அளிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமரின் கருத்து குறித்து கனடா தூதர் நதிர் பட்டேலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதில் கனடா பிரதமரும், மந்திரிகளும் இந்தியாவிலுள்ள விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் தலையிடுவதை ஏற்க முடியாது என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசப்பட்டதாகவும் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக இரு நாடுகளும் மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கைகளை பற்றி பகிர்ந்து கொண்டதுடன், இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்புகள் உலக நாடுகளுக்கு மிகுந்த உதவியாக இருப்பது குறித்து இருவரும் பேசியதாகவும் கனடா பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் இருந்ததாகவும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago